என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையொட்டி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது.

    கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது. அப்பகுதியில் மட்டும் 65 மி.மீ.மழை கொட்டியது.

    இதே போல் சென்னிமலை, தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பாய்ந்து ஓடியது.

    ஈரோடு நகரில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. புறநகர் பகுதிகளான மூலப்பாளையம், ஆணைக்கல்பாளையம், முள்ளாம்பரப்பு, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    இந்த மழையால் அப்பகுதி குளுமையானது. வெப்பம் அடியோடு குறைந்தது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதையொட்டி ஈரோடு மாவட்ட விவசாயகளும் பொது மக்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் மழை கனமழையாக பெய்யவும் வருண பகவானை வேண்டி வருகின்றனர்.
    Next Story
    ×