என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி இல்லாமல் இயங்கிய 20 பள்ளி வேன்கள் பறிமுதல்
    X

    ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி இல்லாமல் இயங்கிய 20 பள்ளி வேன்கள் பறிமுதல்

    ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 20 வேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து இணை ஆணையர் ராமலிங்கம் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும் புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது.

    இதில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், அதிக பயணிகளை ஏற்றி வந்த வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் மற்றும் வரி வசூல் மூலம் 3 லட்சத்து 600 ரூபாய் பெறப்பட்டது.

    மேலும் அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 20 வேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 7 நபர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய ஒருவர், மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த 11 ஓட்டுனர்கள் உள்பட 19 ஓட்டுனர்கள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வரும் வாகன ஓட்டிகள் பார்க்கும் வகையில் டி.வி. மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
    Next Story
    ×