என் மலர்
செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 14 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து காய்ச்சல் வராத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கமும், மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. இதன் மூலம் சீதோஷணம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.
இதன் மூலம் தற்போது அதிகளவில் கொசு உற்பத்தி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 14 பேர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 4 பேர் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்ச்சலால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடித்து வருகிறார்கள். மேலும் நோய்கள் பரவாமல் தடுக்க குளோரின் கரைசல் குடி தண்ணீரிலும், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் குப்பைகள் அதிகளவில் சேராமல் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் டயர்கள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்தும் 3-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் என சிகிச்சை பெற்று வருகிறார்களோ, அவர்களது முழு விவரத்தையும் பெற்று அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மேற்கொண்டு
கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் யார் சிகிச்சைக்கு சென்றாலும், அவர்கள் முழு விவரங்களையும் பெறு வதற்கு ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாக பணியாளர்கள் நியமித்து கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் விரைவில் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கமும், மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. இதன் மூலம் சீதோஷணம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.
இதன் மூலம் தற்போது அதிகளவில் கொசு உற்பத்தி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 14 பேர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 4 பேர் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்ச்சலால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடித்து வருகிறார்கள். மேலும் நோய்கள் பரவாமல் தடுக்க குளோரின் கரைசல் குடி தண்ணீரிலும், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் குப்பைகள் அதிகளவில் சேராமல் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் டயர்கள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்தும் 3-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் என சிகிச்சை பெற்று வருகிறார்களோ, அவர்களது முழு விவரத்தையும் பெற்று அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மேற்கொண்டு
கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் யார் சிகிச்சைக்கு சென்றாலும், அவர்கள் முழு விவரங்களையும் பெறு வதற்கு ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாக பணியாளர்கள் நியமித்து கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் விரைவில் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






