என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவேப்பிலங்குறிச்சி அருகே வி‌ஷ பூச்சி கடித்து இளம்பெண் பலி
    X

    கருவேப்பிலங்குறிச்சி அருகே வி‌ஷ பூச்சி கடித்து இளம்பெண் பலி

    கருவேப்பிலங்குறிச்சி அருகே வி‌ஷ பூச்சி கடித்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீமுஷ்ணம்

    கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூரை சேர்ந்தவர் கமலன். இவரது மனைவி மல்லிகா (வயது 25). இவர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மல்லிகாவை வி‌ஷப்பூச்சி கடித்தது.

    மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×