என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் பிளஸ்-2 மாணவி மாயம்
    X

    ஈரோட்டில் பிளஸ்-2 மாணவி மாயம்

    பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ஈரோடு, ஜூலை.12-

    பு.புளியம்பட்டி, திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் சலீம். இவரது மகள் பாத்திமா ஜீமானா(வயது17).

    பாத்திமா ஜீமானா அம்மாபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் காலை பள்ளிக்கு செல்லும் ஜீமானா மாலை வீட்டுக்கு வந்துவிடுவார்.

    அதே போன்று சம்பவத்தன்றும் வழக்கம் போல் பாத்திமா ஜீமானா வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் பாத்திமா ஜீமானா வீட்டுக்கு வராத தால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் பாத்திமா ஜீமானா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து பாத்திமா ஜீமானா தந்தை சலீம் புளியம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை கண்டுபிடித்து தறுமாறு புகார் கொடுத்தார்.

    மாயமான அன்று பாத்திமா ஜீமானா கருப்பு கலர் லெக்கின்ஸ், பிங்க் கலர் டாப்ஸ், கருப்பு நிற பர்தா அணிந்திருந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×