என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை சிப்காட் பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு: 2 நிறுவனத்துக்கு நோட்டீஸ்
    X

    பெருந்துறை சிப்காட் பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு: 2 நிறுவனத்துக்கு நோட்டீஸ்

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பெருந்துறை சிப் காட் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் அதிகளவில் கரும்பு கையை வெளியேற்றுவதாகவும், சுத்திகரிப்பு செய்யாமல் சாயக் கழிவுகளை வெளியேற்றி வருவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பெருந்துறை சிப் காட் பகுதிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிப்காட் வளாகத்தில் உள்ள 7 டெக்ஸ்டைல் நிறுவனங்களில் இந்த ஆய்வு நடந்தது.

    அப்போது 2 நிறுவனங்கள் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் கரும்புகை வெளியிட்டது தெரியவந்தது. இதன் பேரில் அந்த 2 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கலெக்டரின் இந்த ஆய்வுப் பணி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×