என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டவாளத்தை கடந்து சென்ற வாலிபர் ரெயில் மோதி பலி
    X

    தண்டவாளத்தை கடந்து சென்ற வாலிபர் ரெயில் மோதி பலி

    ஈரோட்டில் தண்டவாளத்தை கடந்து சென்ற வாலிபர் மீது ரெயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் மூதாட்டி இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதிக்கு உட்பட்ட காவிரி ரெயில் நிலையம்-ஆனங்கூர் இடையே தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த நபரின் சட்டை பாக்கெட்டில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் இறந்து போனவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம்(வயது40) என்று தெரியவந்தது.

    செல்வம் ஆனங்கூர் ரெயில் நிலையத்தை கடந்த போது ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் ரெயில் மோதி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    எனினும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போன்று ஈரோடு பகுதிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த மூதாட்டி மஞ்சள், ரோஸ் கலர் பூப்பட்ட சேலை, மஞ்சள் கலர் பாவாடை சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.இறந்த மூதாட்டி உள்ளூர் நபரா? அல்லது ரெயிலில் பயணம் செய்யும் போது தவறி விழுந்து இறந்தாரா? என்று தெரியவில்லை.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×