என் மலர்
செய்திகள்

பக்கத்து வீட்டு நபருடன் மாயமான மனைவியை மீட்டு தாருங்கள்: கணவர் போலீசில் புகார்
ஈரோட்டில் பக்கத்து வீட்டு நபருடன் மாயமான மனைவியை மீட்டு தாருங்கள் என்று கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு, கணபதி நகர், பெரிய செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி கிருத்திகா (வயது 32).
சம்பவத்தன்று கிருத்திகா செட்டி பாளையத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக மொபட்டில் சென்றார். நீண்ட நேரமாகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த தியாகராஜன். மனைவி கிருத்திகாவை உறவினர் வீடுகள், தோழிகள் வீடுகளில் தேடினார்.
எனினும் கிருத்திகா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து தியாகராஜன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். அதில் தனது மனைவி கிருத்திகா பக்கத்து வீட்டில் வசித்த வந்த நபருடன் மாயமாகி விட்டதாகவும், மனைவியை மீட்டு தர வேண்டி என்று கூறி இருந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான கிருத்திகாவை தேடி வருகிறார்கள்.
Next Story






