என் மலர்
செய்திகள்

அம்மாபேட்டை அருகே மாணவி திடீர் மாயம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சி பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி செல்வி.
இவர்களுக்கு பிரியா (வயது 17), ராஜேஸ்வரி (10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். செல்வி கூலி வேலைக்கு சென்று தன் மகள்களை படித்து வைத்து வருகிறார்.
பிரியா 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரியாவை காணவில்லை.
வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த செல்வி வீட்டில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் பிரியாவை பற்றி எந்த தகவலும் இல்லை.
இது குறித்து செல்வி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவை தேடி வருகிறார்கள்.






