search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    விருத்தாசலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    விருத்தாசலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகிலா(31). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சகிலா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் கூச்சல் போட்டு அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×