என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாளவாடி வனப்பகுதியில் தொடர்ந்து கோடைமழை: கர்நாடகாவுக்கு பாய்ந்து செல்லும் தண்ணீர்
Byமாலை மலர்25 May 2017 11:08 AM GMT (Updated: 25 May 2017 11:08 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி, தலமலை, சிக்கள்ளி போன்ற வனப்பகுதிகளில் தொடர்ந்து கோடை மழை பெய்தது. இந்த மழையால் வன ஓடைகளில் தண்ணீர் ஓடுகிறது. காட்டாறுகளிலும் செந்நிறத்தில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.
ஆனால் இந்த தண்ணீர் எல்லாம் அப்பகுதி விவசாயிகளுக்கு பயன்படாமல் கர்நாடக மாநிலத்துக்கு பாய்ந்து எல்லையில் உள்ள கர்நாடகாவின் சிக்கல்லோ அணையில் போய் சேருகிறது.
இது அப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனை அடையச் செய்துள்ளது. இந்த நீர்நிலை ஓட்டத்தை திருப்பி பவானிசாகர் அணையில் தண்ணீர் சேருமாறு செய்ய வேண்டும்.
அதற்கு சாத்தியமில்லையென்றால் தாளவாடி பகுதியில் அந்த தண்ணீரை நிறுத்தி, சேமிக்க சிறிய அணை கட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். தாளவாடியை போல் நேற்று இரவு கோபி, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி பகுதிகளிலும் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி, தலமலை, சிக்கள்ளி போன்ற வனப்பகுதிகளில் தொடர்ந்து கோடை மழை பெய்தது. இந்த மழையால் வன ஓடைகளில் தண்ணீர் ஓடுகிறது. காட்டாறுகளிலும் செந்நிறத்தில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.
ஆனால் இந்த தண்ணீர் எல்லாம் அப்பகுதி விவசாயிகளுக்கு பயன்படாமல் கர்நாடக மாநிலத்துக்கு பாய்ந்து எல்லையில் உள்ள கர்நாடகாவின் சிக்கல்லோ அணையில் போய் சேருகிறது.
இது அப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனை அடையச் செய்துள்ளது. இந்த நீர்நிலை ஓட்டத்தை திருப்பி பவானிசாகர் அணையில் தண்ணீர் சேருமாறு செய்ய வேண்டும்.
அதற்கு சாத்தியமில்லையென்றால் தாளவாடி பகுதியில் அந்த தண்ணீரை நிறுத்தி, சேமிக்க சிறிய அணை கட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். தாளவாடியை போல் நேற்று இரவு கோபி, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி பகுதிகளிலும் மழை பெய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X