என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஸ்டிரைக்
    X

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஸ்டிரைக்

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பாதிக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஓடவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. நேற்றை விட இன்று மேலும் குறைந்த அளவே அரசு பஸ்கள் ஓடியது.
    ஈரோடு:

    ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 13-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பாதிக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஓடவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. நேற்றை விட இன்று மேலும் குறைந்த அளவே அரசு பஸ்கள் ஓடியது.

    அதற்கு பதிலாக நேற்றை விட இன்று கூடுதலாக தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் டவுன் பஸ்கள் பல திருப்பூர், கோவை, வெள்ளகோவில், சேலம், கரூர் போன்ற வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் இன்று பயணிகள் கூட்டம் ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ் நிலையத்தில் பஸ் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுப்பட கூடும் என்பதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கோவை மற்றும் திருப்பூருக்கு தினமும் அரசு பஸ்கள் 2 நிமிடத்துக்கு ஒன்று செல்லும். ஆனால் இப்போது அரை மணி நேரத்துக்கு ஒன்று தான் இயக்குப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். அரசு பஸ்களுக்கு பதிலாக ஆம்னி மற்றும் மினி பஸ்களும் இன்று கூடுதலாக இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ஈரோட்டை போல் கோபி, சத்தி, பெருந்துறை, பவானி, அந்தியூர் உள்பட மாவட்டம் முழுவதும் இன்று குறைந்த பஸ்களே இயக்கப்பட்டன. அதே சமயம் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டதால் பாதிப்பு இல்லை.
    Next Story
    ×