என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் கனவு நிறைவேறாது: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    ஓ.பன்னீர்செல்வம் கனவு நிறைவேறாது: அமைச்சர் செங்கோட்டையன்

    விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கனவு நிறைவேறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிளஸ்-2 தேர்வில் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்கள் மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக ரேங்க் பட்டியலை மாற்றி கிரேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் மாணவரை திட்டுவதும் அதனால் ஏற்படும் மனநிலையும் மாறி உள்ளது.

    எஸ்.எம்.எஸ்.மூலம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 646 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வரும் பள்ளி கல்வி மானிய கோரிக்கையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

    கல்வியில் புதிய புரட்சியாக தமிழில் மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-1 வகுப்பு தேர்வை பொது தேர்வாக நடத்த பரிசீலனை நடந்து வருகிறது. தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த புதிய பாடத்திட்டம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு உள்பட தேர்வுகளை எளிதில் சந்திக்க முடியும். 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் மூலம் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் ஓ.பி.எஸ்,“விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும்” என்று கூறி உள்ளாரே? என்று கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை உண்டு அதன் அடிப்படையில் சுய விளம்பரத்துக்காக கருத்துக்களை கூறுவது ஏற்புடையது அல்ல அரசு கவிழும் என்று யார் கூறி வந்தாலும் அந்த கனவு பலிக்காது அது நனவாகாது.

    தமிழகத்தில் 50 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெறும். இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    Next Story
    ×