search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் மின் கசிவு: மின்சார ரெயில் சேவை பாதிப்பு
    X

    சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் மின் கசிவு: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்னல்களை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்னல்களை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்குள்ள சர்கியூட் போர்ட்டில் இன்று காலை 9 மணிக்கு மின் கசிவு ஏற்பட்டு வெடித்தது.

    இதனால் ரெயில் சிக்னல்கள் இயங்கவில்லை. இதையடுத்து தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- தாம்பரம், கடற்கரை மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நடு வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள் பஸ்களில் ஏறி சென்றனர்.

    சிக்னலில் சர்கியூட் போர்டில் எற்பட்ட கோளாரை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப் பட்டது.

    சிக்னல் இயங்கிய பின் ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த கோளாறால் இன்று காலை 9.05 மணி முதல் 10.10 மணிவரை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×