என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது போலீஸ் வாகனம் மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
காரைக்குடி:
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 4-வது வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் கடைகளுக்கு தோசை மாவு விற்பனைக்கு வழங்கி வந்தார். இன்று காலை தோசை மாவை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிறிது தூரமே சென்ற நிலையில் அந்த வழியாக தேவகோட்டையில் இருந்து வந்த போலீஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் கிடைத்ததும் காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் வாகனத்தை ஓட்டிவந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கார்த்திக் சுந்தர் (32) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






