search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    கல்லிடைக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

    • செல்லையா கடந்த 7-ந்தேதி இரவு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
    • சந்துரு, அருள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் செல்லையா(வயது 26). இவர் கடந்த 7-ந்தேதி இரவு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சந்துரு(22), அருள்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×