search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே 2 இளம்பெண்கள் மாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே 2 இளம்பெண்கள் மாயம்

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகில் உள்ள ேவப்பம்பட்டியை சேர்ந்த காமாட்சி மனைவி சுஜிதா (வயது24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சுஜிதா வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தியபிரதேசம் மாநிலம் முறைனா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனம் (24). இவர் கடந்த 10 மாதங்களாக தேனி கோட்டூர் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவரது கணவர் சத்தியேந்திரன் வீட்டிற்கு வந்தபோது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×