என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிபட்டணம் அருகே திருமணமாகி 2 வருடத்தில்   இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி.விசாரணை
    X

    காவேரிபட்டணம் அருகே திருமணமாகி 2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி.விசாரணை

    • உறைவினார்கள் வந்து சமரசம் செய்து வைப்பார்களாம்.
    • டி.எஸ்.பி.அமலா அட்வின் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே யுள்ள சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர்.இருசக்கர வாகன மெக்கானிக் பட்டறை வைத்துள்ளார்.இவரது மனைவி பவித்ரா (வயது 21).

    இவர்களுக்கு திருமண மாகி 2 வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.அவ்வப்போது உறைவினார்கள் வந்து சமரசம் செய்து வைப்பார்களாம்.

    நேற்று மீண்டும் இதேபோல தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதாகர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.அப்போது பவித்ரா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இது குறித்து பவித்ராவின் தந்தை குமரன் தந்த புகாரின்பேரில் காவேரிபட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 2 வருடத்திற்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் டி.எஸ்.பி.அமலா அட்வின் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×