search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு
    X

    கோப்பு படம்.

    ஆண்டிபட்டியில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு

    • ஆண்டிபட்டியில் 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள்
    • சம்பவத்தன்று கொண்டம நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பல்லவ ராயன்பட்டி கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பா ராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி பங்களாமேடு, பாரஸ்ட் ரோடு 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (40). சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கொண்டம நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே ஜெயக்குமார் என்பரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×