search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டைகூட்டுரோடு அருகே  மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
    X

    பகண்டைகூட்டுரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

    • பகண்டைகூட்டுரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஏந்தல் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மனைவி வீரம்மாள் (65), முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (47) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை கைது செய்து, தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×