search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி
    X

    பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்தனர்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம், கோவலன் நகரை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 49). இவர் நேற்று இரவு கோவலன் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது ஆண்டாள்புரம், ஓதுவார்மடம் நாச்சியப்பன் மகன் கணேசன் (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ. 1500-ஐ பறித்துச் சென்றார். இதுபற்றி சுந்தரேசன் சுப்பிரமணியபுரம் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

    மதுரை வாடிப்பட்டி, அய்யங்கோட்டை, அம்பேத்கர் நகரைச்சேர்ந்த மாமுண்டி மகள் ஹரிணி மனோன்மணி (23). இவர் நேற்று இரவு விளாங்குடி பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஹரிணி மனோன்மணியிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×