என் மலர்
உள்ளூர் செய்திகள்

700 கிலோ குட்காவை நூதன முறையில் கடத்திய 2 பேர் கைது
- வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர்.
- குட்கா, ஹான்ஸ் ஆகியவை மூட்டைகளாக உள்ளே பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து சரக்கு வேன் ஒன்று, கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த வேனை போலீசார் நிறுத்தி அதில் என்ன உள்ளது என கேட்டனர். அப்போது வேனில் இருந்தவர்கள் தேங்காய் நார் மூட்டைகளை கொண்டு வருகிறோம் என கூறினார்கள்.
ஆனாலும் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் வேனுக்குள், தேங்காய் நார் மூட்டைகளுக்கு இடையே குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் ஆகியவை மூட்டைகளாக உள்ளே பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்த போலீசார் அதை வைத்திருந்ததாக தென்காசி மாவட்டம்வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர். வேனின் பின்னால் மூட்டைகளை சோதனை செய்தனர். (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ஏசுராஜ், சரக்கு வேனின் டிரைவர் மற்றும் உரிமையாளர் ஆவார். செல்வம் கிளீனராக இருந்து வந்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு அவர்கள் குட்காவை கடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.






