search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

    • செம்பட்டி அடுத்த புதுகோடங்கிபட்டி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த சின்னாள பட்டியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • விசாரணையில் 2 பேரும் பைக் திருடிதை ஒப்புக்கொண்டதால் போலீசார் கைது செய்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னமுனி யாண்டி. இவர் கடந்த வாரம் செம்பட்டி அடுத்த வத்தலக்குண்டு சாலையில் உள்ள புல்வெட்டி குளம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து சின்னமுனியாண்டி செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செம்பட்டி அடுத்த புதுகோடங்கிபட்டி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த சின்னாள பட்டியைச் சேர்ந்த இள ங்கோவன் மகன்மணி கண்டன் (வயது31), கண்ணன் மகன் பிரகாஷ் (22) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு ப்பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், மணிகண்டன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். பின்னர் அவர்களை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×