என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது
- மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
- சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் செல்வம் (வயது57) என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள தனது வீட்டில் மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்படி செல்வம், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story