search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் - மாணவி படத்தை மார்பிங் செய்து அரசு டாக்டரிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
    X

    சிறுவன் - மாணவி படத்தை மார்பிங் செய்து அரசு டாக்டரிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார்.
    • ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபா ளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார். இவரது மனைவியும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசு டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மகனுக்கு, ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த சிறுவனின் அரை நிர்வாணம் படத்தை எடுத்து உதயகுமார், மாணவி ஒருவருடைய படத்துடன் மார்பிங் செய்து அந்த படத்தை டாக்டர் ரமேஷிடம் காட்டி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

    இந்த படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த டாக்டர் ரமேஷ், தனது மகன் படத்தை ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்டு எச்சரித்து அனுப்பினார்.

    இதனால் கோபம் அடைந்த உதயகுமார், தனது கடையில் வேலை செய்யும் தொளசம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (24), ஞானசேகரன் (22) ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து ஊழியர்கள் இருவரும் டாக்டர் வீட்டுக்கு சென்று அந்த படத்தை மீண்டும் காண்பித்து, அந்த படத்தில் இருக்கும் மாணவியின் தாய் விஷம் குடித்து மயங்கி விட்டதாகவும் கூறி 10 லட்சம் பணம் கேட்டு டாக்டரிடம் மிரட்டி உள்ளனர்.

    அங்கு அவர்கள் இரு வரையும் உட்கார வைத்து விட்டு சூரமங்கலம் போலீசா ருக்கு போனில் டாக்டர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக், ஞானசேகரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உதயகுமார், மற்றும் அவரது உறவுகார பெண்ணையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×