என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணமான பெண் உள்பட 2 பேர் மாயம்
- வீட்டைவிட்டு சென்ற தாட்சாயிணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- மனைவியைக் கடத்தி சென்று விட்டதாக தளி போலீசில் சீனிவாசன் புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கெம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்.
இவரது மனைவி தாட்சா யினி (வயது 32).சம்பவத்தன்று வீட்டைவிட்டு சென்ற தாட்சாயிணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவர் தனது மனைவியைக் கடத்தி சென்று விட்டதாக தளி போலீசில் சீனிவாசன் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பாகலூர் அருகேயுள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த சீனப்பா என்பவரது மகள் பாரதி (23) என்பவரும் திடீரென மாயமாகி விட்டார்.
இந்நிலையில் அவரை திருப்பத்தூர் மாவட்டத்தைசேர்ந்த பிரதாப்(24) என்ற வாலிபர் கடத்தி சென்றுவிட்டதாக பாகலூர் போலீசால் சீனப்பா புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பாரதியைத் தேடி வருகின்றனர்.






