என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து 2 பேர் சாவு
- வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
- அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தம்பட்டி கிராமம் அருகே உள்ள கவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 43). இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் மன விரக்தியில் இருந்தார்.
இதனால் பேபி கடந்த 7-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார்.
அங்கு பேபி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் தளி அருகே உள்ள பசுவனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (23). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை.
சம்பவத்தன்று மனவி ரக்தியில் இருந்த சசிக்குமார் விஷம் குடித்தார்.இவரது உறவினர்கள் இவரை மீட்டு பெங்களளூரு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






