என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே குடிப்பழக்கத்தால் 2 பேர் தற்கொலை
- குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் 2 தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி லெட்சுமிபுரம் நடுத்தெரு வைச் சேர்ந்தவர் பிரேம்கு மார் (வயது 34). இவருக்கும் இலக்கியா (24) என்பவரு க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரேம்குமார் குடிப்பழக்க த்துக்கு அடிமையானவர்.
சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சென்றவர் குப்பிநாயக்கன்பட்டி சாலையில் சுய நினை வில்லாமல் கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று தனது கணவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் அருகே உள்ள தாத்தப்பன்குளம் 9-வது வார்டு பகுதியைச் சேர்ந்த வர் ெபான்ராஜ் (49). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழ க்கத்துக்கு அடிமையானவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்ததால் தனது குடும்ப த்தினருடன் சண்டை போட்டு வெளியே சென்றார்.மீண்டும் அவரை அறிவுரை கூறி அழைத்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே பொன்ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






