என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே  சாராயம் விற்ற 2 பேர் கைது
    X

    சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.
    • வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாண்டியன் குப்பம் கல்லாநத்தம் தகரை, காட்டனத்தல், கிராமங்களில் சின்னசேலம் போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொது கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா (வயது 37) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.

    அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ராஜா மீது வழக்கு பதிவு செய்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் காட்டனத்தல் கிராமத்தில் வெங்கடேசன் என்பவரின் மனைவி சிவகாமி (38) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×