search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
    X

    சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

    • வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
    • விஜயன் என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரியூர், வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று வட சிறுவள்ளூரை சேர்ந்த விஜயன்(25) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். உடன் அவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×