search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே விவசாயியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
    X

    களக்காடு அருகே விவசாயியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    • பேச்சிமுத்து,செந்தில்குமார் ஆகியோர் பெருமாளை வழிமறித்து செலவுக்கு ரூ.200 தரும்படி கேட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி பெருமாளிடம் இருந்த ரூ. 100- ஐ பறித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது40). விவசாயி இவர் நேற்று நாகன்குளம் விலக்கில் வந்து கொண்டிருந்த போது கடம்போடுவாழ்வு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (25), சிங்கிகுளத்தை சேர்ந்த செந்தில்குமார் (44) ஆகியோர் அவரை வழிமறித்து செலவுக்கு ரூ. 200 தரும்படி கேட்டனர். அதற்கு பெருமாள் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 100- ஐ பறித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேச்சிமுத்து, செந்தில் குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×