என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அறுத்த 2 பேர் கைது
- நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அனுமதி இன்றி அறுத்து கொண்டு இருந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள ஆர்.மோட்டூரை சேர்ந்தவர் அருள் (வயது 29). அண்ணா நகரை சேர்ந்தவர் கவிபாரதி (28).
இவர்கள் ராணி மூக்கனூர்-அரூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அனுமதி இன்றி அறுத்து கொண்டு இருந்தனர்.
இது குறித்து சாலை ஆய்வாளர் சிவானந்தம் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






