என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அறுத்த 2 பேர் கைது
    X

    நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அறுத்த 2 பேர் கைது

    • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அனுமதி இன்றி அறுத்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள ஆர்.மோட்டூரை சேர்ந்தவர் அருள் (வயது 29). அண்ணா நகரை சேர்ந்தவர் கவிபாரதி (28).

    இவர்கள் ராணி மூக்கனூர்-அரூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அனுமதி இன்றி அறுத்து கொண்டு இருந்தனர்.

    இது குறித்து சாலை ஆய்வாளர் சிவானந்தம் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×