search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்மச்சாவு வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் கைது
    X

    கொலை வழக்கில் கைதான ஆசை, தென்னரசு.

    மர்மச்சாவு வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் கைது

    • சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    • இந்நிலையில் தொழிலாளியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகரில் டாஸ்மாக் கடை அருகே கடந்த 6-ம் தேதி ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் லிங்கவாடி எல்.வலையபட்டியைச் சேர்ந்த அழகுப்பிள்ளை மகன் சீனி (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.

    சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டா ரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோண த்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    விசா ரணையில் சீனி கொலை செய்ய ப்ப ட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இத னைத் தொட ர்ந்து அதே பகுதி யை சேர்ந்த சில ரிடம் போலீ சார் தீவிர விசா ரணை மே ற்கொ ண்ட னர்.

    சம்பவம் நடந்த அன்று வத்தி பட்டியில் ஆசை என்ப வரின் பெட்டி க்கடையில் சீனி பொரு ட்கள் வாங்கி னார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசை, தென்னரசு, ரஜினி என்ற நல்லியப்பன் மற்றும் பாபு ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனி யை தாக்கினர்.

    அதன்பி ன்னர் சீனி அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செ ன்றார். அப்போது பின் தொட ர்ந்து வந்த அவர்கள் 4 பேரும் டா ஸ்மாக் கடை யில் மீண்டும் தகராறு செய்து தாக்கினர். இதனால் சீனி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. முதலில் சந்தேக மர ணமாக வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் இது கொலை வழக்காக மாற்ற ப்பட்டது.

    வழக்கில் தொடர்பு டைய புதுக்கோ ட்டையை சேர்ந்த தென்னரசு, வலைய பட்டி ஆசை ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் தலைமறை வாக உள்ள வலையப ட்டியைச் சேர்ந்த ரஜினி மற்றும் கவராயபட்டியை சேர்ந்த பாபு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட சீனிக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    Next Story
    ×