என் மலர்
உள்ளூர் செய்திகள்

மளிகை கடைக்காரர் உள்பட 4 பேரை கடித்த 2 தொழிலாளிகள்- குடிபோதையில் வெறிச்செயல்
- காயமடைந்த 4 பேரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- புகாரன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தூயமணி, சுப்ரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த குள்ளனூரைச் சேர்ந்தவர் தூயமணி (வயது 35). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சின்னபையன் என்கிற சுப்ரமணி (45).
இருவரும் நேற்று இரவு போச்சம்பள்ளயில் மது வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்கள் புதுமோட்டூர் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்கி சென்றனர். அங்கு போதையில் இருந்த 2 பேரும் மளிகை கடை உரிமையாளர் முருகனிடம் (53) வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து முருகனை தாக்கி கடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு முருகனின் மகன் குறளரசன், உறவினர் மாணிக்கம் (45), நவீன்குமார் ஆகியோர் 3பேரும் தடுக்க வந்தனர். அவர்களையும் கடித்தனர். இதில் காயமடைந்த 4 பேரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முருகன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தூயமணி, சுப்ரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். குடிபோதையில் 2 பேரும் 4 பேரை கடித்து காயம் ஏற்படுத்திய சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






