என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்ககிரியில் போலி மருத்துவர்கள் 2பேர் கைது
- போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்ககிரி:
சங்ககிரி விஎன்பாளையம் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (63). இவர் சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை டாக்டர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் கீதா, உள்ளிட்ட குழுவினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது நோயாளிகளுக்கு பன்னீர்செல்வம் ஆங்கில மருத்துவம் பார்த்தது உறுதியானது.
போலி மருத்துவர் பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்து நோயாளிகளுக்கு பயன்படுத்தி வந்த மருந்து மாத்திரைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, சங்ககிரி வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் (67), என்பவர் வீட்டில் வைத்து ஆங்கில மருத்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து தெரியவந்தது.
அதன் பேரில் சங்ககிரி அரசு மருத்துவர் செந்தில்வேலுடன் சென்று சோதனை செய்தபோது போலி மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டு மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சங்ககிரியில்
போலி மருத்துவர்கள் 2பேர் கைது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்