search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே    தனியார் ஏற்றுமதி நிறுவன  உரிமையாளரிடம்  ரூ.2 கோடி பணமோசடி
    X

    ஓசூர் அருகே தனியார் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.2 கோடி பணமோசடி

    • இளங்கோவுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது.
    • வங்கி கணக்கில் 6 வங்கிகள் மூலம் ரூ.1 ேகாடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 820-யை செலுத்தி உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் மீனாட்சி ரோடு பகுதிதையச் சேர்ந்தவர் இளங்கோ (வயது73). இவர் ஓசூரில் ஏற்றுமதி இறக்குமதி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இளங்கோவுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் பணம் முதலீடு செய்தால் அமெரிக்காவில் இருந்து புற்றுநோயுக்கான மருந்துகளின் மூலப்பொருட்கள் அனுப்பிவைப்பதாக தகவல் வந்தது. இதனை நம்பி இளங்கோ அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் மெலிசியா கிப்சன் என்பவர் பேசியதாகவும், பணம் முதலீடு செய்தால், அதற்கான மருந்துகளின் மூலப்பொருட்கள் உடனடியாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இதனை நம்பி இளங்கோ அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 6 வங்கிகள் மூலம் ரூ.1 ேகாடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 820-யை செலுத்தி உள்ளார். ஆனால், அந்த மர்ம நபர் கூறியப்படி பொருட்களை எதுவும் அவர் ஏற்றுமதி செய்து அனுப்பி வைக்கவில்லை. இதுகுறித்து மீண்டும் இளங்கோ அந்த மர்மநபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

    ஆனால், போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது தெரியவந்தது. உடனே இதுகுறித்து இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 2 கோடி வரை மர்மநபர்கள் பணமோசடி செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×