search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
    X

    ரூ.2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

    • அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    செந்துறை ஒன்றியம், இருங்கலாக்குறிச்சி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.106.95 லட்சம் மதிப்பீட்டில் இருங்கலாக்குறிச்சி முதல் ஆனைவாரி ஓடை வரை சாலை அமைக்கும் பணியினையும், பின்னர்புதுப்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.80லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் கிழக்குத்தெருவில் கழிவுநீர்வாய்க்கால் 210 மீ அமைக்கும் பணியினையும், தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.53 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் ஆதிதிராவிடர்காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து பணிகளை தரமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்மந்தப்பட்ட அலுலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆதனக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.63 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைத்தல் பணியினையும், பின்னர்முதுகுளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.27 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி முதுகுளம் அய்யனார்குளம் ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணியினையும், அதனைத் தொடர்ந்து ஆலத்தியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர்தெரு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர்முள்ளுக்குறிச்சி கிராமத்தில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42.36 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணியினையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர்பரிமளம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறி யாளர்வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.


    Next Story
    ×