என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொப்பூர் அருகே லாரியில் ஏற்றும்போது மாடுகளை சித்ரவதை செய்த 2  பேர் கைது
    X

    தொப்பூர் அருகே லாரியில் ஏற்றும்போது மாடுகளை சித்ரவதை செய்த 2 பேர் கைது

    • 13 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 3 எருமை கன்றுகுட்டிகளை லாரியில் ஏற்றி கொண்டி–ருந்தனர்.
    • மாடுகளை வண்டியில் ஏற்றும்போது சித்ரவதை செய்ததாக தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் கம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). இவர் மிருக நலவாரிய அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் சிவக்–குமார் நேற்று தொப்பூர் வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்–போது அங்கு 2 பேர் 13 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 3 எருமை கன்றுகுட்டிகளை லாரியில் ஏற்றி கொண்டி–ருந்தனர்.

    முறையான பராமரிப்–பின்றி அந்த மாடுகளை வண்டியில் ஏற்றும்போது சித்ரவதை செய்ததாக தெரியவந்தது. உடனே சிவக்குமார் அந்த 2 பேரிடம் மாடுகளை வண்டியில் இருந்து இறக்கி விடுமாறு கூறினார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து சிவக்குமார் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் (45), கிருஷ்ணகிரி அவ்வை நகரைச் சேர்ந்த டிரைவர் பைரோஸ் அம்ஜத் (37) ஆகிய2 பேர் மாடுகளை சித்ரவதை செய்தது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×