என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ சாலை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
    X

    ராணுவ சாலை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

    • பார்த்தீபன் அருவாளாலும், அவரது அப்பா சுப்பிரமணியுடன் சேர்ந்து சிவசங்கரனை தாக்கியுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணி, பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி அருகே உள்ள மேல்சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் சிவசங்கரன்(34). இவர் தற்போது மணிப்பூரில் ராணுவத்தில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் சிவசங்கரன், 55 நாள் விடுமுறையில் தனது சொந்த ஊரான மேல்சீனிவாசபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரின் தந்தை பச்சையப்பனுக்கும், அவரது உடன் பிறந்த தம்பியான சுப்பிரமணி(60) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்லும் பாதை சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று பிரச்சனைக்குரிய அந்த பாதையில் சிவங்கரன் சென்ற போது, அவரது சித்தப்பா மகனான பார்த்தீபன்(29) அவ்வழியே எதற்கு வந்தாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றி, கை கலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தீபன் அருவாளாலும், அவரது அப்பா சுப்பிரமணியுடன் சேர்ந்து சிவசங்கரனை தாக்கியுள்ளார்.

    அப்போது சிவசங்கரனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவசங்கரனின் சித்தப்பா சுப்பிரமணி மற்றும் அவரது மகன் பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×