search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களிடம் 18 பவுன் நகை  பறித்த 2  வழிபறி திருடர்கள் கைது
    X

    கோப்புபடம்.

    பெண்களிடம் 18 பவுன் நகை பறித்த 2 வழிபறி திருடர்கள் கைது

    • வேலை முடிந்து மோட்டார் சைக்கிளின் சென்றபோது 2 பேர் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து
    • விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேலத்தில் 3 பெண்களிடம் நகைபறித்தது தெரியவந்தது

    சேலம்:

    சேலம் பனமரத்துப்பட்டி குரால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 27). புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளின் சென்றபோது 2 பேர் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்று தப்பி ஓடி ஓடினர்.

    இது பற்றி ஜீவானந்தம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு ெசய்து மர்ம நபர்களை ைகது செய்தனர். இதில் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த லோகேஷ்வரன் (24), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த வேல் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேலத்தில் 3 பெண்களிடம் 18 பவுன் நகைபறித்தது தெரியவந்தது .அவர்களிடம் இருந்து போலீசார் நகையை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி 2 பேரையும் ஜெயலில்அடைத்தனர்.

    Next Story
    ×