search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
    X

    சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை

    • சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது மனைவி சுலோசனா. இவர் கடந்த 10-ந் தேதி அன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் ஊருக்கு திருவிழாவை பார்க்க சென்றார்

    மீண்டும் 13ம் தேதி அன்று மாலை தனது வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். வீட்டின் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 18 பவுன் நகைகள் (செயின்,தோடு,மோதிரம் என) காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் பின்பக்க கதவை மர்மநபர்கள் யாரோ உடைத்து திருடிச் சென்றுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அண்ணா மலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×