என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே 17 வயது பெண் மாயமான சம்பவம்:  கடத்திய காதலன், மணந்த கணவன் 2 பேரும் கைது
    X

    ஓசூர் அருகே 17 வயது பெண் மாயமான சம்பவம்: கடத்திய காதலன், மணந்த கணவன் 2 பேரும் கைது

    • கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.
    • நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யுள்ள கணபதி நகரை சேர்ந்த 17 வயது பெண் ,நவீன்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    இது அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அருண்குமார் என்பவருடன் கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில் ஏற்கனவே அந்த பெண்ணை காதலித்த நவீன்குமார் அவரை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×