search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் ஒன்றிய பகுதியில் ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
    X

    மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டிய காட்சி.

    ராதாபுரம் ஒன்றிய பகுதியில் ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

    • குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
    • குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றியம் மகாதேவன்குளம், குட்டம் மற்றும் ஆனைகுடி ஆகிய பகுதிகளில் பல்வேறு நிதிகளின் கீழ் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் பள்ளிகளுக்கு தேவையான கட்டிடம் ஆகியவற்றுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.

    குட்டம் பஞ்சாயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஆனைகுடி பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், மகாதேவன்குளம் பஞ்சாயத்தில் ரூ.32 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    குறிப்பாக குட்டம் பள்ளிக்கு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் கழிப்பறை வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் யூனியன் தலைவர் இளையபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் புளோரன்ஸ் விமலா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், இசக்கிபாபு, ஜெஸி பொண்கலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், ராதிகா சரவணகுமார், வைகுண்டம் பொன் இசக்கி, பஞ்சவர்ணம் ஜெயகுமார், ஆனந்த், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பொன்மணி நடராஜன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×