என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த கோர்ட்டு ஊழியரின் வீடு.
திண்டுக்கல்: கோர்ட்டு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை
- மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
- இந்த கொள்ளை சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏழுமலையான் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது47). இவர் கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பல்வேறு அறைகளில் நகை மற்றும் பணம் உள்ளதா? என தேடினர். அங்கு பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இன்று ஊர் திரும்பிய கலைச்செல்வி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் நகைகள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் புறநகர் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






