என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது
- போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
- மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது கெலமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சூரியா (24), ராயக்கோட்டை அருகேயுள்ள எச்சம்பல்லி ஜங்சன் பகுதியில் நவீன்குமார் (29), அஞ்செட்டி பஸ் நிலைய பகுதியில் சமியுல்லா (48), மத்திகிரி அருகேயுள்ள காலுகொண்டபல்லியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சிவபிரகாஷ் (48) ஆகியோர் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்று பிடிபட்டனர்.
இதேபோல சிப்காட் காமராஜ் நகர் பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற இக்பால் (19), மூக்கபள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியை சேர்ந்த அபுசுபியான் (20), சூளகிரி அருகேயுள்ள உத்தனபள்ளியில் பெட்டி கடை நடத்திவரும் ரவி (37), காமராஜ் நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பயஸ் (56) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம் போலீசார் நடத்திய வேட்டையில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ரத்தினராம்(30), கிருஷ்ணகிரி தாலுகா பகுதியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே முஹம்மத் சபீர் (38), பெத்ததனப்பல்லியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வேங்கடசாமி (52), போச்சம்பள்ளி அருகே கல்லாவி ரோடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் முருகேசன் (58), கல்லாவி ஆனந்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45) ஆகியோரும் சிக்கினர்.
இதேபோல ஊத்தங்கரை கட்டேரி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சுரேஷ் (29), தேன்கனி கோட்டை பஸ் நிலையம் அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் சின்னராசு (40) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.






