search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் கடையில் பதுக்கி விற்ற 15 கிலோ புகையிலை பறிமுதல்
    X

    பேட்டையில் கடையில் பதுக்கி விற்ற 15 கிலோ புகையிலை பறிமுதல்

    • பேட்டையை சேர்ந்த அரபாத் என்பவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
    • சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டையை சேர்ந்தவர் அபுதாகிர். இவரது மகன் யாசர் அரபாத்(வயது 23).

    இவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக பதுக்கி விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ேசாதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் யாசர் அரபாத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×