search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் பகுதியில் சாலையில் சுற்றிதிரிந்த 15 மாடுகள் பிடிபட்டன
    X

    மேலப்பாளையம் பகுதியில் சாலையில் சுற்றிதிரிந்த 15 மாடுகள் பிடிபட்டன

    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • மேலப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி துணை கமிஷனர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

    மேலும் மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    Next Story
    ×