search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூரில் கோழிப்பண்ணையில் 1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

    ஆத்தூரில் கோழிப்பண்ணையில் 1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முறைகேடாக கடத்தி சேமிக்கப்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் உணவு வழங்கல் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியர் ராஜேஷ்குமார் தலைமை யில், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ் மற்றும் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று காலை, ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசா ரணையில் முறைகேடாக கடத்தி சேமிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சுமார் 1200 கிலோ அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க உள்ளனர்.

    Next Story
    ×