search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.23 லட்சம் கையாடல் செய்த 11 டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை
    X

    ரூ.23 லட்சம் கையாடல் செய்த 11 டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை மதுரவாயல், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 11 ஊழியர்கள், மது விற்பனையில் வசூலான ரூ.23 லட்சத்தை அரசுக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக 2010-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் இழப்பீட்டு தொகையாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    Next Story
    ×