என் மலர்
உள்ளூர் செய்திகள்

ARIYALUR NEWS : Small round chess tournament
- திருமானூர் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது
- 648 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு மேல்நிலை பள்ளியில், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், திருமானூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.போட்டியை ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி தொடக்கி வைத்தார். ஊராட்சித் தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமானூர் ஒன்றிய அளவில் 50 அரசு ஆரம்ப பள்ளி, 10 அரசு உதவி பெறும் பள்ளி, 20 நடுநிலைபள்ளி, 14 அரசு உயர்நிலைப்பள்ளி, 14 அரசு மேல்நிலை பள்ளிகளிலிருந்து 648 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.போட்டிகளுக்கு நடுவர்களாக கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் வீராசாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். கீழப்பழுவூர் அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி நன்றி கூறினார்.
Next Story






